Monday, July 11, 2011


ஆறு வருடங்கள்
சிரித்துப் பேசியதற்கு
மொத்தமாய்
அரை நொடியில் அழவைத்தாய்
அறியாமலா..?
அறியாமையாலா..?

உன்னோடு பேசாத நொடிகளில்
என்னுயிர்
என்னிடம் இருப்பதில்லை
என அறிந்தும் ஏன்
என்னைப் பேசவிடாமல்
தவிக்கவிட்டாய்...?

ஒரு நாளும் நான்
காணாத கண்ணீரை
நீ வடித்து
என் கண்களுக்குள்
கருமேகத்தை வரவழைத்துவிட்டாய்
இன்னும் என் கண்களுக்குள்
கசியும் நீர் தடைப்படவில்லை....

Thursday, December 31, 2009

Happy New Year பட தொகுப்பு




Happy New Year

இந்த வருடத்தின் சிந்தனைகள் வெற்றியை நோக்கியே இருக்கட்டும்

Monday, December 28, 2009

http://oneclickwork.blogspot.com/

Friday, December 18, 2009


எப்படி சொல்லுவேன் மருத்துவரிடம்
என் இதயத்தில் இருக்கும் ஓட்டைக்கு
காரணம் நீ என்று

வந்தேன் உன்னை பார்க்க ஆவலுடன்
கண்டேன் உன்னை இன்னொருவனுடன்
கண்ணில் சுரந்தது கண்ணீரில்லை
இரத்தம்

நீ மௌன விரதம் இருந்தால்
முதலில் உன் கண்களை மூடிக்கொள்
என்னிடம் உன் உதடுகளை விட
கண்களே அதிகம் பேசுகின்றன

Thursday, December 17, 2009


நான் கொடுத்த கடிதத்தில்
கப்பல் விடுகிறாள் அவள்
தண்ணீரில் இல்லை என்
கண்ணீரில்

Monday, November 30, 2009


பெண்
அருகே வந்தாலே..
வியர்த்துவிடும் அப்பாவி நான்...!

காணும்
படத்தில் காதல் காட்சி வந்தால் கண்மூடிகொள்ளும் நாணம் கொண்டவள் நீ ..!

இது இப்படி இருக்க..,

உன்னையும் என்னையும்
சேர்த்து வைக்க
இந்த பொல்லாத காதலுக்கு மட்டும்
ஏன்
இவ்வளவு ஆசையோ?

உன் நிழல் பார்த்து
கோபபடுவதுண்டு
என்னை விட
அதிக நேரம்
உன்னுடன் இருப்பதால்

கோவிலில் அழகு சிலைகள்
அனைத்தும் அசையாமல் இருக்க
ஒரு சிலை மட்டும்
அசைய கண்டேன்
நீ கோவிலுக்குள் வந்ததும்

உன்னை எந்த அளவுக்கு
எனக்கு பிடிக்கும் என்று
தெரியவில்லை
ஆனால்
உன்னை பிடித்த அளவுக்கு
வேறு எதையும்
பிடிக்கவில்லை

கண் சிமிட்டாமல்
உன்னை பார்க்க ஆசை
இப்பொழுது
கண்சிமிட்டும் நேராமாவது
உன்னை பார்க்க ஆசை படுகிரேன்

ஆண்களின் காதல்
ஆயுள் வரை
பெண்களின் காதல்
அம்மா அப்பா
அழும் வரை

தோல்வி என்பது புதிதல்ல
அதனால்தான் அவளை மறக்க
நினைக்கும் போதெல்லாம்
நான் தோற்று போகிரேன்
என் மனதோடு

நான் உன்னை காதலிப்பது
அனைவருக்கும் தெரிந்து விட்டது
உன்னை தவிர ...

நீ என்னை மறந்து விட்டாய்
என்பது எனக்கு தெரியும்
பாவம் என் இதயம்
அதற்கு தெரியாது
இன்னும் துடிக்கிறது
உன்னை நினைத்து ...
என்னிடம் சொல்
என்னை காதலிக்கிறேன் என்றல்ல
நீ வேறு யாரையும் காதலிக்கவில்லை
என்று

Saturday, November 28, 2009

உன்னுடைய உதடுகள்
உச்சரிக்கும் வரை
உணர்ந்ததில்லை நான்
என் பெயர் இத்தனை
அழகென்று


உன்னை மறக்க நினைக்கிறேன்
கண்களை மூடினால்
கனவெல்லாம் நீ
கண்களை திறந்தால்
நினைவெல்லாம் நீ
Yoga ||

tamilish

puthuvai